ஊத்துக்கோட்டை சிவபெருமான் கோவில்களில் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2018 12:10
ஊத்துக்கோட்டை : சிவபெருமான் கோவில்களில் நடந்த அன்னாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், நடைபெறும் விழாக்களில் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் நடைபெறும் அன்னாபிஷேக விழா சிறப்பு வாய்ந்தது. நேற்று 24 ல் நடந்த இவ்விழாவில், மூலவர் வால்மீகிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பச்சரிசி சாதத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அலங்காரம் செய்த சாதம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், மெய்யூர் மெய்கண்டேஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவபெருமான் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.