பதிவு செய்த நாள்
26
அக்
2018
12:10
மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் நவ.,8ல் கந்த சஷ்டி விழா துவங்கி நவ.,13 மாலை 5:40 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நவ.,8 காலை 9:15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை. காலை 10:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு, நவ.,9 காலை 9:00 மணிக்கு காமதேனு வாகனம், நவ.,10 காலை 9:00 மணிக்கு யானை வாகனம், நவ.,11 காலை 9:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனம், நவ.,12 காலை 9:00 மணிக்கு சப்பரம் வாகனம், நவ.,13 காலை 11:00 மணிக்கு குதிரை வாகனம், மாலை 4:35 மணிக்கு வேல் வாங்குதல், மாலை 5:40 மணிக்கு பத்மாசூரனை சூரசம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம், மாலை 6:15 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் சாந்தாபிஷேகம், தீபாராதனை, அவ்வைக்கு நாவற்கனி கொடுத்து அருள்பாலித்தல். நவ.,14 காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம், காலை 11:30 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீராட்டு உற்சவம், மாலை 6:00 மணிக்கு தங்கரத உலா நடக்கிறது. தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் மாரிமுத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.