ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்றுப்பகுதி சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமி யைமுன்னிட்டு அன்னாபிஷேக விழா நடந்தது.ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த விழாவில் அன்னாபிஷேகமும் காய்கறி அலங்காரமும் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. அம்பாள் ஸாகம் பரி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
*ராஜபாளையம் கருப்பஞானியார் சுவாமி கோயில் நடந்த அன்னாபிஷேக விழாவிற்கு தலைவர்வைத்தீஸ்வரன் தலைமை வகித்தார். தர்மகர்த்தா மாணிக்கம் முன்னிலை வகித்தார். கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.ஏற்பாடுகளை பழனிச்சாமி, ராமசாமி, ஞானகுரு, விநாயகமூர்த்தி செய்தனர்.