பதிவு செய்த நாள்
28
அக்
2018
02:10
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் நடந்தன. இதையொட்டி, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, எஸ்.வி.,ரோடு, கடைவீதி, காந்தி சாலை, வெளிப்பேட்டை தெரு, சுண்ணாம்புகாரவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக, உற்சவர் ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேரகணபதி கோவில் உட்பட, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.