Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி: தர்மபுரி ... பிளாஸ்டிக்: கோவில்களில் தடை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடி திருப்பூர் அருகே கிடைத்த பொக்கிஷம்
எழுத்தின் அளவு:
118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடி திருப்பூர் அருகே கிடைத்த பொக்கிஷம்

பதிவு செய்த நாள்

28 அக்
2018
02:10

திருப்பூர்:திருப்பூரை அடுத்த, பொங்குபாளையத்தில், 118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடிகளை, வீரராஜேந்திரன் தொல்லி யல் ஆய்வு மையம் படியெடுத்து வருகிறது.
திருப்பூர் அருகே பொங்கு பாளையத்தில், திண்ணை பள்ளி ஆசிரியராக இருந் தவர் அமாசை வாத்தியார் சுவாமி. இவர், 1862ல் பிறந்து, கல்வி ஞானம் பெற்று, திண்ணைப்பள்ளி நடத்தி வந்துள்ளார்.திண்ணை ஆசிரியர் அமாசை வாத்தியார் சுவாமியின் பூர்வீக வீட்டில், கட்டுக்கட்டாக, பழைய ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன. இது குறித்து அறிந்த, வீரராஜேந்திரன் தொல்லியல் ஆய்வு மைய நிர்வாகிகள், ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.ஓலைச்சுவடிகளை, மூலிகை எண்ணெய் பூசி துாய்மைப்படுத்தி, படியெடுக்கும் பணி நடந்து வருகிறது. கொங்கு வரலாற்று ஆய்வாளர் பொன்னரசு தலைமையிலான குழுவினர், பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளை படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீரராஜேந்திரன் தொல்லியல் ஆய்வு மைய செயலாளர் சுந்தரகணேசன் கூறியதாவது:வாத்தியார் சுவாமியின், கொள்ளுப்பேரன் காளீஸ்வரன், சகோதரர் பேரன் சண்முகம் ஆகியோர், பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிகளை அளித்தனர். அவை படியெடுத்து, சிடிகளாக மாற்றி வைக்கப்படும்.

மருத்துவ குறிப்பு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் புராணம், மந்திர சக்கரம், பழம் பாடல்கள் என, மொத்தம், 18 ஓலைச்சுவடி கட்டுகள் பெறப்பட்டன. மேலும், இளையான்குடி கவிராயர், 340 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்கள் அடங்கிய ஓட்டுச்சுவடிகளும் உள்ளன.இவ்வாறு, 118 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஓலைச்சுவடிகளில் உள்ள, அரிய தகவல்கள், பாடல்கள், மந்திர சக்கரங்களை துல்லியமாக எடுத்து, தனித்தனி புத்தகங்களாக தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரி வித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar