அரிசி - 400 கிராம் தேங்காய் - 1 மூடி சர்க்கரை - 300 கிராம் நெய் - 50 கிராம் உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது? அரிசியை களைந்து வடிகட்டி நைசாக மெஷினில் அரைத்து கொள்ளவும். மாவு சூடு ஆறியதும் வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து ஆற வைக்கவும். வறுத்த மாவில் உப்பைக் கரைத்து, சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைப் பெரிய கண் சல்லடையில் கட்டிகள் இல்லாமல் சலிக்கவும். இட்லி அவிப்பது போல், இந்த மாவை அவிக்கவும். அதன்பின் துருவிய தேங்காய், நெய், சர்க்கரை சேர்த்து கிளறினால் சிவனுக்கு பிடித்தமான புட்டு ரெடி.