Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சென்னை அஸ்தினாபுரம் கோவிலில் இன்று ... சென்னை முருகன் கோவில்களில் சூரசம்ஹாரத்திற்கு சிறப்பு ஏற்பாடு சென்னை முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

பதிவு செய்த நாள்

13 நவ
2018
12:11

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. முருகப்பெருமானுக்கு தினமும், நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது.

விழாவையொட்டி, நேற்று (நவம்., 12ல்) மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. இன்று (நவம்., 13ல்) மாலை, 4:00 மணி முதல், சூரசம்ஹாரம் நடக்கிறது. கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன் மற்றும் சூரபத்மனை முருகப்பெருமான் வதை செய்யும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.

* கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவில், கரியகாளியம்மன் கோவிலில், வேலாயுத சுவாமி வேல் வாங்கும் உற்சவம் நேற்று நடந்தது.

இன்று (நவம்., 13ல்), மாலை, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது. முத்துக் கவுண்டனூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில், சூரசம்ஹார விழாவில், இன்று (நவம்.,13ல்) சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. நாளை (நவம்., 14ல்) மாலை, முருகன், வள்ளி, தெய்வாணை திருக்கல்யாணமும் நடக்கிறது.

* வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆறாம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் முக்கிய நிகழ்வுக்கு, இன்று, 13ம் தேதி எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் வாங்கும் உற்சவமும், மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடக்கிறது.நாளை, 14ம்தேதி மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar