Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரியில் கந்த சஷ்டி சிறப்பு ... திருவண்ணாமலை தீப திருவிழாவில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டியில் அரோகரா கோஷம் முழங்க சூரனை வதம் செய்த கந்தசாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
02:11

வீரபாண்டி: திரளான பக்தர்களின், அரோகரா கோஷம் முழங்க, சக்திவேலால், கந்தசாமி சூரனை வதம் செய்தார். கந்தசஷ்டி விழாவையொட்டி, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார விழா, காப்புக்கட்டு உற்சவத்துடன், நேற்று முன்தினம் (நவம்., 12ல்) தொடங்கியது.

நேற்று (நவம்., 13ல்) மாலை, 4:30 மணிக்கு, கோவிலில் இருந்து, கையில் சக்திவேல் ஏந்தியபடி, கந்தசாமி போர்க்கோலத்தில் வெளியே வந்தார். அவருக்கு எதிரே, அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். சூரசம்ஹாரத்தை காண, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்களின், அரோகரா, வெற்றிவேல், வீரவேல் என, கோஷம் எழுப்ப, யானை முக சூரன், சிங்க முக சூரன், ஆடு முக சூரனைத் தொடர்ந்து, இறுதியாக, சூரபத்மனை, வேல் கொண்டு, கந்தசாமி அழித்தார். அப்போது, தங்கள் வயலில் விளைந்த நெல், கடலை, வாழைப்பழங்களை, சுவாமி மீது வீசி, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று (நவம்., 14ல்) காலை, மயில் வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடக்கவுள்ளது. மாலை, தெய்வானையுடன் திருக்கல்யாணம், இரவு, சப்பரத்தில் கல்யாண கோலத்தில் திருவீதி உலா நடக்கும். பின், ஊஞ்சல் பாலி உற்சவத்துடன், சூரசம்ஹார விழா நிறைவடை யும். அதேபோல், சேலம், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம்; அம்மாபேட்டை சுப்ரமணியர், ஊத்துமலை முருகன், பேர்லேண்ட்ஸ் முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழநியாண்டவர் ஆசிரமம் உள்ளிட்ட கோவில்களில், நேற்று (நவம்., 13ல்), சூரசம்ஹார விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநியில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திராளான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பங்குனி உத்திர விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருத்தணி : திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்தர விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்கும்பகோணம்; ... மேலும்
 
temple news
திருவாரூர்; தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர பாத தரிசன திருவிழா. பக்தர்களுக்கு இடது பாதத்தை காட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar