Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் முருகன் ... புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புல்லாணி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

15 நவ
2018
04:11

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் நேற்று (நவம். 14ல்) திருக்கல்யாணம் நடந்தது.

விருதுநகர்: வாலசுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும் முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

* சிவகாசி: சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் ஒரு வாரமாக கந்தர் சஷ்டி விழா நடந்தது. 7ம் நாளான நேற்று (நவம்., 14ல்) திருக்கல்யாணம் நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை மணக்கோலத்தில் வீற்றிருக்க திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

*வத்திராயிருப்பு: காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு 18 வகை அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமி எழுந்தருள மாலை மாற்றும் வைபவம் முடிந்து, வள்ளி, தெய்வானை தேவியர்களுக்கு சுப்பிரமணியர்
மாங்கல்யம்அணிவித்தார்.

அப்போது சஷ்டி பாராயண வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர்: மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நாளான நேற்று (நவம்., 14ல்) இரவு முருகன்
திருக்கல்யாணம் நடந்தது. கொலு மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, தேவியர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடக்க திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பட்டர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

*ராஜபாளையம்: மாயூர நாத சுவாமி கோயில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை முன்னிட்டு ராஜபாளையம்  முருகன், வள்ளி, தேவசேனாவிற்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை கோயில் வளாகத்தில் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.

வள்ளி, தேவசேனாவுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தார். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் இளங்கோ தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar