* இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால், ஒழுக்கத்தை இழந்தால் அது உயிரை இழப்பதற்குச் சமமாகி விடும். * செய்த செயலின் பலன் பன்மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பும். அதனால் நற்செயலில் மட்டும் ஈடுபட வேண்டும். * சந்தனக் கட்டை தன்னையே அழித்துக் கொண்டு பிறருக்கு மணம் தருகிறது. அதுபோல மனிதன் பிறர்நலனுக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும். * பணத்தால் மட்டுமே பிறருக்கு உதவ முடியும் என்று எண்ணாதீர்கள். சேவை செய்பவனுக்கு உள்ளத்தில் அன்பும், உடலில் வலிமையும் இருந்தால் போதும்.