* துன்ப இருளில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களின் இதயத்தில் அருள் ஒளி பரவத் தொடங்கும். * ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை மறந்தால் நம்மால் உயிர் வாழவே முடியாது. * இனிமையற்ற உண்மை, இனிமையான பொய் இரண்டுமே வாழ்வில் விலக்கப்பட வேண்டியவை. * உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைத்திருக்கும். * உலகம் ஒரு பல்கலைக்கழகம். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர்களே.