Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை, பேரூர் கோவில்களில் ... சென்னிமலை செல்லாண்டியம்மன் கோவிலில் பொங்கல் விழா சென்னிமலை செல்லாண்டியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு தகவல் மையங்கள் திறப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்களுக்கு தகவல் மையங்கள் திறப்பு

பதிவு செய்த நாள்

23 நவ
2018
12:11

சென்னை:தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும், அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத் துறை சார்பில், தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இது குறித்து, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, சென்னை, தேனி, புளியரை, களியக்காவிளை ஆகிய இடங்களில், பயணத் தகவல் உள்ளிட்ட உதவிகளுக்கு, தகவல் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

வரும், ஜன., 31ம் தேதி வரை, இவை செயல்படும்.தகவல்களை பெற, 18000 4251757 என்ற, கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள், குமுளி செல்லாமல், கம்பம்மெட்டு வழியாக, மாற்றுப் பாதை ஒதுக்கப்பட்டு, ஒரு வழிப் பாதையாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.இதையடுத்து, இந்த ஆண்டு, தேனி- - குமுளி சாலையில் அமைந்துள்ள வீரபாண்டி, கவுமாரியம்மன் கோவிலில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை மாவட்டம், குற்றாலநாத சுவாமி கோவில், புளியரையில், பன்மொழி திருமலைக் குமாரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நெல்சேர் கட்டடம் முன், தகவல் மையங்கள் மைக்கப்பட்டுள்ளன.களியக்காவிளையில் உள்ள தகவல் மையம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அடிப்படை வசதிகள் செய்யப்பபட்டுள்ளன.சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, நிலக்கல் பகுதியை, அடிப்படை முகாமாக அமைக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நிலக்கல்லுக்கு அடுத்து, தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.நிலக்கல்லில் இருந்து பம்பாவிற்கு, தொடர்ச்சியான பஸ் சேவை வழங்க, கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar