Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமை மாறாமல் கோயில்கள் புதுப்பிப்பு நெகமம் பெருமாள் கோவிலில் இன்று 24ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரண்மனை, கோயில் சிற்பங்களை உருவாக்கிய காரை கல் செக்கு
எழுத்தின் அளவு:
அரண்மனை, கோயில் சிற்பங்களை உருவாக்கிய காரை கல் செக்கு

பதிவு செய்த நாள்

24 நவ
2018
03:11

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் காரை கல் செக்கு, இன்றும் மக்களின் பார்வைக்கு உள்ளது. இந்த செக்குகளில் சாந்து தயாரித்து மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைகளை உருவாக்கி இருப்பதை வரலாறு கூறுகிறது.

தமிழகத்தில் காரை கல் செக்குகள் மூலம் சுண்ணாம்பு கல்லை அரைத்து சாந்து தயாரித்துள்ளனர்.தற்போதைய கல் கட்டடங்களுக்கு முன்பு ஏழாம் நூற்றாண்டில் செங்கல்
கட்டடங்கள் இருந்துள்ளன. கருங்கல் சுவர்களுக்கு அதற்கு மேல் காரைப் பூச்சு தேவை இல்லை. செங்கல் பயன்படுத்தப்பட்ட சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச்சு தேவைப்பட்டது.

சுண்ணாம்புடன் மணல் கலந்து அதனை காரை ஆலைகளில் அரைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்புவரை இது வழக்கத்தில் இருந்தது.சிமென்ட் வருகைக்குப்பின் காரை பூச்சு வழக் கொழிந்தது.அரைக்கப்பட்ட சுண்ணாம்புக் காரையை சில நாட்கள் சேமித்த பிறகே பயன் படுத்தப்படும். சுண்ணாம்புக் காரை ஆலையில் சுற்றுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரைத் தீர்வை, முக்காத் தீர்வை, முழுத் தீர்வை, என மூன்று வகைப்படும்.

முழுத்தீர்வை காரையில் மணல் முழுமையாக அரைபட்டிருக்கும். சுண்ணாம்பு பசைத் தன்மையும், பிடிப்புத்தன்மையும் அதிகம் கொண்டது. காரை கலவையில் கடுக்காய் நீர், பதநீர் அல்லது சர்க்கரை நீர் மற்றும் நெல்லிக்காய், தான்றிக்காய், முட்டையின் வெள்ளைக்கரு கலந்து காரை தயாரித்தால் அதன் ஸ்திரத் தன்மை அதிகமாகும். இதற்கு வச்சிரக்காரை
என்று பெயர்.

இவ்வாறு காரை செக்கிலோ, சுண்ணாம்பு அரவை ஆலையிலோ அரைத்து தயாரிக்கப் படுகின்ற சுண்ணாம்பு சாந்தையே சுதைச் சிற்பங்கள் தயாரிக்க பயன்படுத்தினர். சிற்பிகள் கோபுரங்களில் உள்ள சுதைகளை சிற்பங்களை உருவாக்க இன்றும் சுண்ணாம்பு காரைகளையே பயன்படுத்துகின்றனர்.

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை அமைக்கு சுண்ணாம்பு காரைகளையே பயன்படுத்தியதாக, திருப்பணிமாலை என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சுண்ணாம்பு காரை தயாரிக்கும் முறை குறித்தும் விளக்கமாக கூறுகிறது.
இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க சுண்ணாம்பு காரை அரவை ஆலைகளில் பயன்படுத்தப் பட்ட கல் செக்கு, இன்றும் பார்வைக்காக ராமலிங்கவிலாசம் அரண்மனையில் வைக்கப் பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar