பண்ருட்டி:- திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் (நவம்., 22ல்) மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதியை 16 முறை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் 16 கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் ஏராமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.