பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
கோபிசெட்டிபாளையம்: கோபி, ஐயப்பன் கோவிலில், ஆராட்டு விழா, கோலாகலமாக நேற்று(டிசம்., 2ல்) நடந்தது.
கோபி, வேலுமணி நகரில், ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு பிரமோற்சவம், சங்காபிஷேகம், லட்சார்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி விழா, கடந்த நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாள்தோறும், உற்சவருக்கு, பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபாடு நடந்தது. ஐயப்பனுக்கு, நேற்று (டிசம்., 2ல்) ஆராட்டு விழா, கோலாகலமாக நடந்தது. மேளம் முழங்க, உற்சவர் ஐயப்பன், பிரகார வலம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, ஐயப்பனுக்கு, பால், சந்தனம், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் எதிரே, உள்ள குளத்தில், ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவும், பின், லட்சார்ச்சனையும் நடந்தது. விசேஷ பூஜையில், மகளிர் ஆராட்டு விழா குழுவினர் மற்றும் ஐயப்ப சாமி பக்தர்கள்
ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி கண்ணன் செய்திருந்தார்.