Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலைக்கு சிறப்பு ரயில் தெற்கு ... சென்னை பட்டறை பெரும்புதூரில் கிணறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சிலை மாயம் சிறப்பு குழு விசாரணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:12

சென்னை:சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க, அறநிலையத் துறை இணை ஆணையர்கள் அடங்கிய, உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என, உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த, மயில் சிலை மாயமான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அறநிலையத் துறை சார்பில் ஆஜரான, சிறப்பு பிளீடர், மகா ராஜா, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, மதுரை மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் உள்ள, அறநிலையத்துறை இணை ஆணையர்கள் அடங்கிய, உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், துறை ரீதியான விசாரணை நடக்கலாம்; அதே நேரத்தில், சிலை தடுப்பு பிரிவும், தன் விசாரணையை தொடரலாம் என்றனர்.இதற்கிடையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில், சிலைகள் மாயமானது மற்றும் பழமை வாய்ந்த பொருட்கள் சேதப் படுத்தப்பட்டது குறித்து, வழக்கு பதிவு செய்யக்கோரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, ரங்கராஜன் நரசிம்மன், வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுக்கள், விசாரணைக்கு வந்தன.

விசாரணையின் போது, வழக்கறிஞர் ராஜேந்திரன், கோவிலில் இருந்த, பழமைவாய்ந்த, 52 கதவுகள், கற்கள், கலைநயம் மிக்க பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. சிலைகளை திருடு வோர், கோவில் நகைகளை திருடுவோர் என, இரண்டு ரகங்கள் உள்ளன. ஒரு கோவிலின் நகையை விற்க முயன்ற அதிகாரி, கைது செய்யப்பட்டுள்ளார், என்றார்.

இதற்கு, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர், ஏற்கனவே நரசிம்மன் அளித்த புகாரில், சிலை தடுப்பு பிரிவு, விசாரணையை துவங்கி உள்ளது. ஒரே பிரச்னைக்காக, மற் றொரு வழக்கு பதிவு செய்ய தேவையில்லை என்றார். இதையடுத்து, புகாரில் முகாந்திரம் உள்ளதா... என்பதை விசாரித்து, ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க, சிலை தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar