நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் பொறையாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் ஆலஞ்சாலை ரோட்டில் பொறையாத்தம்மன் கோவில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.இதையொட்டி காலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை 6 மணிக்கு மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை 7 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு பொறையாத்தம்மன்னுக்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11.15 மணிக்கு பொறையாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு மற்றும் கரியமாணிக்கம் கிராம பகுதி மக்கள் செய்திருந்தனர்.