சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் கிராமத்தில் உள்ள மதுரைவீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன் கோயிலில் புதியதாக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி ஹோமம், பூர்ணாகுதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், விஷேச சந்தி, பூத சுத்தி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை கடம் புறப்பாடு வேதமந்திரங்கள் முழங்க, 9:00 முதல் 10:30 மணிக்குள் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார் மாதவன் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
* மேலக்கிடாரத்தில் பழமையான தலத்து இருளாயி அம்மன் சமேத இருளப்பசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அன்னதானம் நடந்தது. இரவில் வள்ளி திருமணம் நாடகம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை குலதெய்வ குடிமக்கள், விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.