முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோவிலில் திருமாங்கல்ய பூஜையை முன்னி ட்டு அம்மனுக்கு பால், சந்தனம்,விபூதி,மஞ்சள் பொடி உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேக ங்கள் நடைபெற்றது. பின்னர் 1000க்கும் அதிகமான பெண்களுக்கு திருமாங்கல்யம் வழங்கினார்கள்.
தொடர்ந்து செல்வி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. பின்பு அன்னதானம் நடந்தது. பூஜையில் முதுகுளத்தூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.