Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... சென்னை நங்கநல்லூரில் மஹா பெரியவா மார்கழி உற்சவம் சென்னை நங்கநல்லூரில் மஹா பெரியவா ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி  சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

20 டிச
2018
12:12

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே பன்னிமடை அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவையின், 6ம் பாடலை பக்தர்கள் பாடி, சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.இறைவனிடம் நீண்ட காலம் வேண்டி பெற்ற ஒரு குழந்தை, 500 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் பரவிய அம்மை நோயால் பாதிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில், பெற்றோர் குழந்தையை பன்னிமடை உலகளந்த பெருமாள் கோவில் முன் போட்டு சென்றுள்ளனர்.மனம் பொறுக்காமல் காலை வந்து பார்த்தபோது, குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளது. அம்மை நோயின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பின், படிப்படியாக குணமானது.

இப்படி, குழந்தை வரம் இல்லாதவர்கள், குழந்தை உடல் நிலை சரியில்லாதவர்களின் குறைகளை போக்கும் கோவில் என்ற பெயர் பெற்றுள்ளது.மார்கழியையொட்டி இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு திருப்பாவையின், புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்... என தொடங்கும், பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். பாடலின் பொருள்அன்புத் தோழியே... நீ உடனே எழுந்திரு. பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா. வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா. பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல நடித்து, அவளது உயிரை பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின், உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி, ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை...? உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக என்பதே இப்பாடலின் பொருள்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar