Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியன்காவில் ஜோதி ரூப தரிசனம் அறநிலைய துறையின் புது இணைய தளம் துவக்கம் அறநிலைய துறையின் புது இணைய தளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூரில் 18ம் நுாற்றாண்டு மந்திரக்கல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
உத்திரமேரூரில் 18ம் நுாற்றாண்டு மந்திரக்கல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

25 டிச
2018
12:12

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மந்திரக்கல் மற்றும் 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஆஉராஞ்சுக்கல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர், கைலாசநாதர் கோவில் முன் உள்ள மந்தைவெளி பகுதியில், கல்வெட்டு எழுத்துகள் பொறித்த ஒரு கல், பல ஆண்டுகளாக காணப்படுகிறது.

உத்திரமேரூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வு மையத்தலைவர், பாலாஜி மற்றும் அதன் உறுப்பினர்கள், இந்த கல் குறித்து அறிந்து, ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி கூறியதாவது: இந்த கல், 77 செ.மீ., உயரம், 52 செ.மீ., அகலம் உடையது. மந்தைவெளி கல், கோமரிக்கல் மற்றும் சன்னியாசிக்கல் என, பல பெயர்கள் பெற்றுள்ளன. அக்கால கட்டத்தில், மாடுகளுக்கு கோமாரி போன்ற கொள்ளை நோய்கள் பரவிய போது, கால்நடைகளை பாதுகாக்க, கருங்கல்லில் கட்டங்கள் வரைந்து, மந்திர எழுத்துகளையும், குறியீடுகளையும் பொறித்து, நிலத்தில் நட்டு வைத்தனர். நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை, அக்கல்லை சுற்றி வரச் செய்து, மஞ்சள், வேப்பில்லை மற்றும் மூலிகை கலந்த நீரை பருக செய்து, இந்த மந்திரக்கல்லை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இவ்வாறு செய்தால், கால்நடைகளுக்கு நோய் குணமாகும் என்பது, அம்மக்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது. கடந்த, 18ம் நுாற்றாண்டை சார்ந்த இந்த கல்லின் உச்சியில், சங்கு சக்கர சின்னங்களுடன், 16 கட்டங்களில், கிரந்தம் மற்றும் வடமொழி மந்திர சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போதும், மாட்டு பொங்கல் நாளில், கால்நடைகள் இந்த கல்லை சுற்றி வந்து, வழிபட செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar