நம் நாட்டின் நான்கு திசைகளிலும் கோடித்தலங்களாக நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றை வடமொழியில் சார் தாம் என்று குறிப்பிடுவர். சார் என்றால் நான்கு. தாம் என்றால் கோடி. தென்கோடியில் ராம்நாத் என்னும் ராமேஸ்வரமும், வடகோடியில் பத்ரிநாத், மேற்கில் சோமநாத், கிழக்கு கோடியில் பூரி ஜெகந்நாத்தும் அமைந்துள்ளன. இதில் ராம்நாத்தும், சோம்நாத்தும் சிவா லயங்கள். பத்ரிநாத்தும், ஜெகந்நாத்தும் விஷ்ணு கோயில்கள்.