Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடியில் வசிஷ்ட முனிவர் ... கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் துவக்கம்! கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூருக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
10:02

செஞ்சி: மேல்மலையனூர் கோவிலுக்கு செல்கின்ற வாகனங்கள் வருவதற்கும், போவதற்கும் ஒரே வழியை பயன்படுத்துவதால் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். செஞ்சியிலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழியில் வளத்தியில் உள்ள குறுகலான திருப்பத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. காலை 7.30 மணிக்கு கோபால விநாயகர் பூஜையும், இரவு 9 மணிக்கு கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர். செஞ்சியில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்வதற்கு வளத்தி வழியே பிரதானமாக உள்ளது. இதே வழியில் வேலூர், வந்தவாசி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களும் செல்கின்றன.இதில் வளத்தி கிராமத்தின் வழியாக செல்லும் போது ஜெயின் கோவில் அருகே குறுகலான வளைவு ஒன்று உள்ளது. இந்த வளைவை நேராக மாற்றுவதற்கு இடையூறாக மேற்கில் கோவில் சுற்று சுவரும், எதிர் புறம் ஓட்டு வீடு ஒன்றும் உள்ளது.இந்த வழியில் செல்லும் வாகனங்கள் திருப்பத்தில் மிக நிதானமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் கவனிக்காமல் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் வரும் போது சிக்கல் ஏற்படுகிறது.நேற்று முன்தினம் மேல்மலையனூர் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வந்தன. அனைத்து வாகனங்களும் வளத்தி வழியாக வந்து சென்றன. பெரும்பான்மையான வாகன ஓட்டிகளுக்கு வளத்தியில் உள்ள குறுகலான இடம் இருப்பது சரிவர தெரியாது.இதனால் அவசரப்பட்டு சென்ற வாகனங்கள் குறுகலான வளைவில் சிக்கியதால், நீண்ட தொலை விற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு வரிசையில் நின்றதால் போக்குவரத்து சீரடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.மேல்மலையனூரில் இருந்து செஞ்சி, வேலூர் மார்கமாக செல்வதற்கு சாத்தாம்பாடி கிராமம் வழியாக மாற்று வழிகள் உள்ளன. மேல்மலையனூரில் இருந்து திரும்பி வருகின்ற வாகனங்களை இந்த வழியாக திருப்பி அனுப்பி, வளத்தியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.போலீசார் அனைத்து வாகனங்களையும் வளத்தி வழியில் சென்று வரும்படி செய்வதால் வளத்தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி மாலை தீமிதி விழாவும், 26ம் தேதி மாலை திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடக்க உள்ளது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.இதனால் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதை, தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar