தேவலோகப் பசுவான காமதேனு பெண் முகமும், பசுவின் உடம்பும் கொண்டது. பாற்கடலில் இருந்து பிறந்த இந்தப் பசு, கேட்டதை எல்லாம் வாரி வழங்கும் தன்மை கொண்டது. “உலகத்தின் தாயான காமாட்சி அன்னையே காமதேனுவாக இருந்து கேட்டதை நமக்கு தருகிறாள்,” என மூகர் என்ற புலவர், பஞ்சசதீ என்னும் ஸ்தோத்திரத்தில் குறிப்பிடுகிறார். கோவில் திருவிழாவில் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வரும் போது வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும்.