Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை, ஆதிபராசக்தி வழிபாட்டு ... விருத்தாசலத்தில் நந்தி பகவானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
02:01

உடுமலை:உடுமலை, சோமவார பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, உழவர் திருநாள் பூஜையுடன் நேற்று (ஜன., 16ல்)துவங்கியது.

முக்கிய நிகழ்வான உருவார சிறப்பு பூஜை இன்று (ஜன., 17ல்)நடக்கிறது.உடுமலை அருகேயுள்ள, சோமவாரபட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், தைப்பொங்கல் தமிழர் திருநாள் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமால் கோவிலுக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, ஏராளமான விவசாயிகள், மாட்டுப்பொங்கல் முதல் மூன்று நாட்கள் வருகின்றனர்.

பாரம்பரிய வழிபாடுகால்நடை செல்வங்கள் செழிக்கவும், கால்நடைகளை நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்கவும், வேளாண் வளம் சிறக்கவும் விவசாயிகள், ஆல்கொண்ட மாலுக்கு, பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபடுவதையும், பாரம்பரிய வழிபாட்டு முறையாக கொண்டுள்ளனர்.பாரம்பரிய சிறப்பு மிக்க ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, நேற்று (ஜன., 16ல்) காலை சிறப்பு பூஜை மற்றும் மாலை உழவர் திருநாள் பூஜையுடன் துவங்கியது.

கால்நடைகளுக்கு ஏற்படும் பிணிகளுக்கு வேண்டி, அவை போன்று உருவாரங்களை நேர்த்திக்கடனாக செலுத்தியும், தை முதல்நாள் பிறக்கும் கன்றுகளை, ஆல்கொண்டமால் கோவிலுக்கு வழங்கியும் வழிபட்டனர்.முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு அபிஷேகம், உருவாரம்
வைத்து சிறப்பு பூஜை, அலங்கார பூஜைகள் இன்று (ஜன., 17ல்) நடக்கிறது.

சுற்றுப்புற கிராமங்களில், நாட்டு மாட்டு இனங்களைபாதுகாக்கும் வகையில் உள்ள, கிராமத்திற்கு பொதுவாக வளர்க்கப்படும் சலகெருதுகளுடன் விளையாடியும், தேவராட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் கொண்டாடுகின்றனர்.இன்று, அந்த சலகெருதுகளுடன், கிராமம் ஒன்றாக, பாரம்பரிய இசை, நடனங்களுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்துவர்.

அதே போல், உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள் இன்று (ஜன., 17ல்) ஆல்கொண்டமாலை வழிபட வருவதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.களைகட்டிய வளாகம் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவாரங்கள் விற்பனை கடைகள், தேங்காய், பழம், பூக்கடைகள், உணவு பண்டங்கள், மாடுகளுக்கு தேவையான கயிறுகள், உழவுக்குத்தேவையான உபகரணங்கள் விற்கும் கடைகள் நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், ராட்டிணங்கள், சிறுவர்
விளையாட்டுக்கருவிகள் என பொழுது போக்கு அம்சங்கள், தை பொங்கலுக்கே உரித்தான கரும்பு விற்பனைக்கடைகள் என சுற்றிலும், பல ஏக்கர் பரப்பளவில் கடைகளாக
காணப்படுகின்றன.ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கும் வாய்ப்புள்ளதால், கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி கேமரா என, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சிறப்பு பஸ்கள் இயக்கம்உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, 50 சிறப்பு
பஸ்கள் இயக்கப்படுகின்றன. காணிக்கையாக வழங்கப்படும்

கன்றுகளுக்கு, ஆயிரம் ரூபாய் பராமரிப்பு கட்டணம் செலுத்துமாறு,இந்து சமய அறநிலைய துறை தெரிவித்துள்ளது. ஆண்டு தமிழர் திருநாள் திருவிழாவால், ஆல்கொண்டமால்
கோவில் வளாகம் களைகட்டியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar