விருதுநகர் மாவட்ட முருகன் முருகன் கோயில்களில் தைப்பூசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2019 05:01
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போல் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் உள்ள பாலசுப்பிர மணியசாமி கோயில் மற்றும் திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி கோயில், சிவகாசி முருகன் கோயில், சிவன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.
* ராஜபாளையம்: தைப்பூச திருநாளை முன்னிட்டு ராஜபாளையம் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், வேலாயுதபுரம் பகுதிமருத்துவ துணி உற்பத்தி கம்பெனி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விழாவிற்காக இப்பகுதி மக்கள் விரதமிருந்து புத்தாடை அணிந்து வடக்கு, தெற்கு, நடுத்தெரு பகுதி முருகன் கோயில்களில் இறைவனை வழிப்பட்டனர்.
* ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் சுப்பிரமணியர் கோயிலில் கணபதி ஹோமத்துடன், காலை 9:00 மணிக்கு அபிஷேகம் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் இப்பகுதி வீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.