பதிவு செய்த நாள்
28
ஜன
2019
12:01
நகரி: சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 28 நாட்களில், 1 கோடியே, 6 லட்சத்து, 96 ஆயிரத்து, 796 ரூபாய் ரொக்கம், 382 கிலோ வெள்ளி, 73 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.