பதிவு செய்த நாள்
28
ஜன
2019
01:01
காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, வீரபத்திரதுர்க்கம் அருகே, சந்தை மேட்டில், சென்னகேசவ சென்றாய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ராஜகோபுரம் கட்ட திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. திருப்பணி குழு தலைவர், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை வகித்து, பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், எம்.பி.,யுமான அசோக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.