Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி கோயில்களில் தை அமாவாசை சிறப்பு ... திருப்புவனத்தில் தை அமாவாசை: வைகையில் தர்ப்பணம் திருப்புவனத்தில் தை அமாவாசை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் பக்தர்கள் வௌ்ளம்
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலையில் பக்தர்கள் வௌ்ளம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
12:02

உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்களும், மாட்டு வண்டிகளில் விவசாயிகளும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு, ஆடி, தை அமாவாசை நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்தும், மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வருகின்றனர். தைப்பட்டம், ஆடிப்பட்டம் சாகுபடி விதைப்பதற்கு முன்பு, விதைகளை கொண்டு வந்து, மகசூல் பெருக வழிபட்டு செல்வதையும், இளங்காளைகளை உழவு, வண்டிகளுக்கு பழக்கப்படுத்தி, அவற்றை கோவிலுக்கு அழைத்து வந்து வணங்குவதையும் பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், பாலாற்றின் கரையில் மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளதால், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வருகின்றனர். நேற்று, தை அமாவாசை என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நேற்றுமுன்தினம் மாலை முதலே ஏராளமான விவசாயிகள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்தனர்.


அணை பகுதியில், நுாற்றுக்கணக்கான வண்டிகள் காணப்பட்டன.தை அமாவாசையை முன்னிட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பாலாற்றின் கரையில், நுாற்றுக்கணக்கானவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் ஏழுமலையப்பன் வெங்கடேஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar