Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... சபரிமலை கோவில் வழக்கில் தேவஸ்வம் போர்டு.. பல்டி சபரிமலை கோவில் வழக்கில் தேவஸ்வம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம்: கடும் வறட்சி வருமா?
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம்:  கடும் வறட்சி வருமா?

பதிவு செய்த நாள்

07 பிப்
2019
10:02

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில்,  தீர்த்த கலசத்தில், காவிரி ஆற்று நீர் வைத்து பூஜை செய்யப்படுவதால், மழை பொழியுமா அல்லது கடும் வறட்சி வருமா என, பக்தர்களிடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். சிவன்மலை ஆண்டவர், பக்தர் ஒருவர் கனவில் வந்து, குறிப்பிட்ட பொருளை கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வார். பக்தர் கூறும் தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே, அந்த பொருள் கண்ணாடி பேழையில் வைத்து பூஜை செய்யப்படும்.

இதுவரை இங்கு  மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை உள்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைத்து பூஜை செய்யப்படும் பொருள், சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த அக்., 26 முதல், மூன்று கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ராயனூர் பாஸ்கர், 35, என்பவரின் கனவில் தீர்த்த கலசத்துடன் காவிரியாற்று நீர் வைத்து பூஜை செய்ய  உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது குறித்து, கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம் வைக்கப்பட்டுள்ளது, காவிரி நீர் கொண்டு வந்து வைக்கப்பட்டதால், தற்போது வறட்சி நிலவி வரும் தருணத்தில், வரும் நாட்களில், கடும் மழை பொழியும் அல்லது கடும் வறட்சி நிலவும் என்பதன் குறியீடாக உள்ளது. இதன் தாக்கம் போக போகத்தான் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar