Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனக்குழப்பம் தீர்க்கும் அய்யனார் சென்னையில் நாளை ஹயகீரிவர் ஹோமம்: தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் சென்னையில் நாளை ஹயகீரிவர் ஹோமம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்கு தலைமுறையாக தொடரும் யாகசாலை பணி
எழுத்தின் அளவு:
நான்கு தலைமுறையாக தொடரும் யாகசாலை பணி

பதிவு செய்த நாள்

09 பிப்
2019
01:02

மானாமதுரை: 12 வருடங்களுக்கு ஒரு முறை கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முக்கிய இடம் பிடிப்பது யாகசாலை தான்.

யாகசாலை அமைப்பதற்கு ஆகம விதிப்படி சிவாச்சாரியார்களின் வழிகாட்டுதலுடன், மூலவருக்கு வடகிழக்கு மூலையில் (ஈசாணி) இடம் தேர்வு செய்யப்பட்டு சுடாத பச்சை செங்கற்களை கொண்டு பச்சை மண்ணால் பிசைந்து கும்பாபிஷேகம் முடிந்த மழையில் கரையுமாறு கட்டப்படுகிறது.

மேலும் யாகசாலையை வர்ணங்கள் மற்றும் கலர் பேப்பர்களால் அழகு படுத்தப்பட்டு அதில் யாக குண்டங்கள் வளர்த்து இறைவனுக்கு பூஜை செய்கின்றனர்.

இதில் முப்பது முக்கோடி தேவர்களும் கலந்து கொண்டு இறைவனம் பலம் பெற வேண்டி கொள்வதாக ஐதீகம் கூறுகின்றது. தற்போது மானாமதுரை ஆனந்த வல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலைகளை நான்கு தலைமுறைகளாக இந்த பணியை
தேவகோட்டையை சேர்ந்த பஞ்சநாதன் 65, குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது: எனக்கு முன் தாத்தா காளிமுத்து, தந்தை குருசாமி ஆகியோர் செய்து வந்தனர். தற்போது நான் இந்த பணிகளை செய்கிறேன்.எங்கள் குடும்பத்தினர் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட கேரளா, பெங்களூரு, மும்பை போன்ற இடங்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் யாகசாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம்.

இந்த பணி இறைவனுக்கு செய்கின்ற பணி என்பதால் மனதிற்கும், உடலுக்கும் சந்தோஷமாக உள்ளது என்றார். தொடர்புக்கு: 92451 42182

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar