பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
தேவரியம்பாக்கம்:கவுரி சமேத, கேதாரகவுரீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், கவுரி சமேத கேதார கவுரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின், கும்பாபிஷேகப் பணிகள், 8ம் தேதி காலை, கணபதி பூஜையுடன் துவங்கியது.நேற்று முன் தினம் 9ம் தேதி, காலை இரண்டாம் கால பூஜைக்கு பின், காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜயேந்திரர் சொற்பொழிவு ஆற்றினார். மாலை, 3ம் கால பூஜைக்கு பின், சென்னை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர், சுதா சேஷய்யனின் பக்தி சொற்பொழிவு நடந்தது.
காஞ்சிபுரம், கிளை திருவாவடுதுறை ஆதீனம் சுந்திரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் மற்றும் நிடுமாமடி மடாதிபதி சிவப்பிரகாச வீரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள் முன்னிலையில், காலை, 7:40 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, 7:50 மணிக்கு, மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில், தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள் பங்கேற்றனர்.