பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
மாமல்லபுரம்:மாமல்லபுரம், பாரம்பரிய சிற்பங்களில், ரசாயன கலவை பூச்சு மற்றும் தூய்மைப் பணி நடக்கிறது.பாறைக்குன்றுகளில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள், பாறைவெட்டு கற்களில் கடற்கரைக் கோவில் என, பல்லவ மன்னர்கள், சிற்பக்கலைகள் படைத்தனர்.
தொல்லியல் துறை, இவற்றை பராமரித்துபாதுகாக்கிறது. கடற்காற்றின் உப்புத்தன்மை பாதிப்பிலிருந்து சிலைகளை பாதுகாக்க, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப,
ரசாயன கலவை பூசி, அழுக்கு நீக்கி துாய்மைப்படுத்தப்படுகிறது.ஐந்து ரத சிற்பங்கள் தூய்மை பணி, தற்போது துவக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நீர், காகிதம் கலந்த கூழ்மத்தில், ரசாயன திரவம் கலந்த கலவை, பாறை விளிம்பில், குறிப்பிட்ட தடிமனில் பூசப்படும்.கூழ்ம கலவை, அழுக்கு, வவ்வால், பறவை எச்சம், மண் துகள் உள்ளிட்ட மாசுகளை உறிஞ்சும். சில
நாட்களில் நன்கு உலர்ந்து, அதை பெயர்க்கும் போது, மாசு நீங்கி கலைச்சின்னம் பொலிவடையும். இப்பணி, இங்கு மும்முரமாக நடந்து வருகிறது.