பதிவு செய்த நாள்
14
பிப்
2019
12:02
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.பகல் 11:30 மணியளவில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம்: கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி, 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.