அம்பாளுக்கு புவனேஸ்வரி என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புவனம் என்றால் உலகம். மூன்று உலகங்களுக்கும் உணவளித்து காப்பவள் என்பதால் அவள் புவனேஸ்வரிஎனப் பட்டாள். சிவனது மனைவியாகக் கருதப்படும் இவள், பிரகாசமான உடலை உடையவள். நெற்றியில் பிறை அணிந்திருப்பாள். மூன்று கண்களுடன் முகம் புன்னகையால் ஒளிவீசும். அவளது கையிலுள்ள பலன் செயல்களுக்கேற்ப பலன் தருவதைக் குறிக்கும். தாய்ப்பால் நிறைந்திருப்பதன் மூலம் அவள் உலகிற்கே தாயாக இருந்து உணவூட்டுவதைக் குறிக்கும். நான்கு கைகளிலும் கயிறு, ஆயுதம், அபய வரதமுத்திரைகள் இருக்கும். புதுக்கோட்டையில் அம்பாளின் திருநாமம் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது. அடியே பிடாரி கோபமாக பேசும் பெண்களையும், சேஷ்டை செய்யும் பெண் குழந்தைகளையும், அடியே பிடாரி என திட்டுவது வழக்கம். பிடாரி என்ற சொல்லுக்கு கோபக்காரி என்று பொருள் கொள்வது சரியல்ல. பீடோபஹாரி என்பதே பிடாரி ஆயிற்று. இதற்கு பீடைகளை நீக்குபவள்என்று பொருள். பிடாரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகிலுள்ள திருநீலக்குடி கிராமத்தில் கோயில் உள்ளது. இங்குள்ள பிடாரி பத்மபீடத்தில் (தாமரை பீடம்) சுகாசனமாக அமர்ந்திருக்கிறாள். ஜ்வாலா கிரீடம் (நெருப்பு கிரீடம்) சூடி, டமருகம் என்னும் உடுக்கை, பாசம், சூலம், கபாலம் கைகளில் ஏந்தி காட்சி தருகிறாள். இவளை வழிபட்டால் எல்லா பீடைகளும் நீங்கி ஏழ்மையில் இருந்து விடுபட்டு சுகமான வாழ்வு பெறலாம்.