Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேர்ந்தமரம் நீலகண்ட அய்யனார் ... கருங்குளம் கோயிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர் மண்டபங்களில் கட்டப்படும் கோபுரங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2012
11:02

மதுரை:மதுரை கீழமாசி வீதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலின் சுவாமி, அம்மன் தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள பழமையான மண்டபங்கள் ரூ.7 லட்சத்தில் புதுப்பிக்கப்படுகின்றன. முதன்முறையாக கலசத்துடன்கூடிய கோபுரங்கள் கட்டப்பட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.சித்திரைத் திருவிழாவில், மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மறுநாள் தேரோட்டம் நடக்கும். அன்று சுவாமி சுந்தரேஸ்வரரின் பெரிய தேரும், மீனாட்சி அம்மனின் சிறிய தேரும் அடுத்தடுத்து மாசிவீதிகளில் ஆடி அசைந்து வரும். இந்நிகழ்ச்சிக்காக அன்று அதிகாலை 5 மணிக்கு, அம்மன், சுவாமி சிலைகளை தேர்களில் வைப்பதற்காக மன்னர் திருமலை நாயக்கரால் இரு மண்டபங்கள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. செங்கல், கடுக்காய், சுண்ணாம்பு காரையால் உருவாக்கப்பட்ட பழமையான இம்மண்டபங்கள் சேதமடைந்துள்ளன. சுவாமி தேர் மண்டபத்தின் மேற்பகுதியில் மரவேர் ஊடுருவி, ஆபத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, ரூ.7 லட்சத்தில் இரு மண்டபங்களை புதுப்பிக்க கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் உத்தரவிட்டார். சீர்காழி ரமேஷ் ஸ்தபதி தலைமையில் தற்போது சுவாமி தேர் மண்டபம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. மண்டபத்தில் "ம் வடிவ கோபுரம் புதிதாக அமைக்கப்படுகிறது. இதில் சுதைகளும், மண்டப சுவர்களில் பூதங்கள், நந்தி சிலைகள் வைக்கப்படுகின்றன. சித்திரைத் திருவிழாவிற்குள் இருமண்டப கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar