பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
நாமக்கல்: சாம்பல் புதன்கிழமையை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 6ல்)நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஏசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என, கிறிஸ்த வர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முன், 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடித்து வருகின்றனர். அந்த நாட்கள் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.
இந்த தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமையாகும். இதையொட்டி நேற்று (மார்ச்., 6ல்) நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பாதிரியார்கள் அருள்சுந்தர், ஜான் அல்போன்ஸ் ஆகியோர் நடத்தினர். பிரார்த்தனை முடிந்ததும், அவர்கள் சாம்பலால் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தை வைத்தனர். மேலும் சாம்பல் புதன்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் சி.எஸ்.ஐ., சர்ச், பெந்தேகோஸ்தே தேவாலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.