Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பால்குட ஊர்வலம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
9 எலுமிச்சம் பழங்கள் ரூ.1.5 லட்சத்திற்கு ஏலம்
எழுத்தின் அளவு:
9 எலுமிச்சம் பழங்கள் ரூ.1.5 லட்சத்திற்கு ஏலம்

பதிவு செய்த நாள்

24 மார்
2019
02:03

 உளுந்துார்பேட்டை, திருவெண்ணெய் நல்லுார் அருகே, முருகன் கோவிலில் ஒன்பது எலுமிச்சம் பழங்கள், 1.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்றின் மீது பழமை  வாய்ந்த ஸ்ரீரத்தின வேல் முருகன் கோவில் உள்ளது.

இடும்பன் பூஜைஇக்கோவில் கருவறையில் வேல் மட்டுமே இருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒன்பது நாள் திருவிழா நடத்தப்பட்டு, 10ம் நாள் காவடி பூஜை நடைபெறும். 11ம் நாள் நள்ளிரவில், இடும்பன் பூஜையில் எலுமிச்சம் பழம் ஏலம் விடப்படும்.இந்த  எலுமிச்சம் பழத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; குடும்பப் பிரச்னை தீரும் என்பது, மக்கள் நம்பிக்கை. இதனால், எலுமிச்சம் பழத்தை அதிக விலை கொடுத்து வாங்க, போட்டி ஏற்படும்.இந்த ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா, 11ம் நாளான  நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, எலுமிச்சம் பழங்கள் வரிசையாக ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.இந்த ஏலத்தில்,முதல் நாள் எலுமிச்சம் பழம், 41 ஆயிரம் ரூபாய்க்கு போனது.மொத்தமுள்ள, ஒன்பது பழங்களும், 1.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம்  விடப்பட்டன.கருவாடு சாதம்கடந்தாண்டு, 1.02 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.ஏலம் விடப்பட்ட பழங்களை, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் வாங்கிச் சென்றனர். ஏலம் கேட்கும் உரிமை, உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இதனால், வெளியூர்காரர்கள்  உள்ளூர்காரர்களை வைத்து, ஏலம் கேட்கின்றனர். ஏலம் எடுத்த தம்பதியருக்கு, எலுமிச்சம் பழத்துடன், ஒரு உருண்டை கருவாடு சாதம், பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar