அந்தியூர்: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நடப்பாண்டு சித்திரை தேரோட்ட விழா, கடந்த, 11ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொடியேற்றம், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று (ஏப்., 18ல்) காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, தேரை இழுத்துச் சென்றனர். சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று (ஏப்., 19ல்) நடக்கிறது.