வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.ஏப்.,5 கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 13 வது நாளான ஏப்., 17 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. மாலையில் நடந்த தேரோட்டத்தை எஸ்.ஐ., கேசவராமச்சந்திரன் துவக்கி வைத்தார். குலசேகரன்கோட்டையில் இருந்து தேர் புறப்பட்டு வாடிப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக நேற்று காலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்தனர்.