திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தன. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிநேகவல்லிஅம்மனுக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தீபராதனைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேங்கள் நடந்த போது ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.