மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.காலை 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இரவு 8:00 மணிக்கு கிரிவல பக்தர்களின் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகதளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.