பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கிறார். புத்திசாலி மாணவர்கள் பதில் சொல்கின்றனர். சிலர் ஒன்றும் தெரியாமல் விழிக்கின்றனர். இதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவும், பயமும் தான்! பூமியில் வாழும் போது வேண்டுமானால் மற்றவர் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருந்து தப்பிக்கலாம். ஆனால், என்றாவது ஒருநாள் நாம் கடவுளின் முன்னால் செல்வோம். நம்மிடம் கேள்வி கேட்பார் அவர்.
“நீ படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவில்லை; திடமான சிந்தனையை மனதில் வளர்க்கவில்லை; ’நான் உன் அருகில் இருக்கிறேன்; பயப்படாதே’ என்று நான் சொல்லியதை பொருட்படுத்தவில்லை. இதற்கு பதில் சொல்” என கேட்கும் போது சும்மா நிற்க முடியாது. சரியான பதில் அளித்த பிறகே கடவுள் நம்மை ஏற்பார் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்குத் தகுந்தாற் போல் பூமியில் பயமின்றி வாழுங்கள். பயனுள்ளதாக வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.