கம்மாபுரம்: கம்மாபுரம் பகுதி குறுவை விவசாயிகள், கோடை மழை வேண்டி, கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
கம்மாபுரம் பகுதியில் குறுவை நாற்றுவிடும் பணி தீவிரமாக நடக்கிறது. வெயிலின் கொடுமை யில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக கோடை மழையை எதிர் நோக்கியுள்ள விவசாயிகள், நேற்று (ஏப்., 25ல்), கம்மாபுரம், வி.குமாரமங்கலம், ஊ.கொளப்பாக்கம், இருப்பு கிராமத்திலுள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வேண்டிக் கொண்டனர்.