திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2019 11:05
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு ரத ஊர்வலம் நடந்தது.
இக்கோயிலில் பூச்சொரிதல் விழா முடிந்து ஏப்., 25ல் அம்மனுக்கு கொடியேற்றி காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர். முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் ரதம் ஊர்வலமாக வந்தது. பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 3:30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து பெண்கள் வழிபடுகின்றனர். இரவு 7:00 மணிக்கு கோயில் திருக்குளத்தில் தெப்பத்திருவிழாவும், குளத்தைச் சுற்றி தீபம் ஏற்றி வழிபாடும் நடைபெறும்.