Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலத்தில் ராமானுஜரின் 1002வது அவதார ... பட்டிவீரன்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா பட்டிவீரன்பட்டி பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசியில் மழை வேண்டி சிவன் கோயிலில் யாகம்
எழுத்தின் அளவு:
சிவகாசியில் மழை வேண்டி சிவன் கோயிலில் யாகம்

பதிவு செய்த நாள்

10 மே
2019
05:05

சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம், பர்ஜன்ய சந்தி ஜெபம், ருத்ரா அபிஷேகம் நடந்தது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளதையொட்டி வெயில் வாட்டி வதைக்கிறது. கண்மாய், ஊரணி, கிணறு போன்ற எந்த நீர் நிலைகளிலும் தண்ணீர் இல்லை.

மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் அவதிப்படுகின்றன. கோடை மழையை நம்பி சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மழை இல்லாமல் பயிர்கள் அழிந்து விடும் நிலையில் உள்ளது.

இதை தொடர்ந்து சிவகாசி சிவன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம், நந்தி பெருமானுக்கு, பர்ஜன்ய சாந்தி ஜபம், சிவபெருமானுக்கு ருத்ரா அபிஷேகம் நடந்தது. நந்தி பெருமான் முன்பாக யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

சுப்பிரமணியன் பட்டர் யாகம் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் உதவி ஆணையர் ஹரிஹரன், கோயில் செயல் அலுவலர் சுமதி கலந்து கொண்டனர்.

*அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்க நாதர் கோயிலில் மழை வேண்டி வர்ண ஜபம் நடந்தது. கணபதி ஹோமம், புண்யாகவசனம், வர்ண மூல மந்திரம், வர்ண பாராயணம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

*ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் வருண ஜபம் நடந்தது.இதை முன்னிட்டு நேற்று (மே., 9ல்) காலை 8:30 மணிக்கு கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, வருணஜபத்தை கோயில் அர்ச்சகர் பாஸ்கரன் செய்தார்.

ஓதுவார் பழனிசாமி பதிகம் பாடினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுந்தரராஜன், கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar