பதிவு செய்த நாள்
11
மே
2019
02:05
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, மைவாடி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி, வரும் 16ம் தேதி நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட மைவாடி
மிக பழமையான கிராமம் ஆகும். தனி ஊராட்சியான இதை சார்ந்து பல கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரைத்திருவிழா நடப்பது
வழக்கம்.
நூறு ஆண்டுக்கும் மேலாக நடக்கும் இந்த விழாவில், தேரோட்டம் குறிப்பிடத்தக்கதாகும், இதில், பல ஆயிரம் மக்கள் பங்கேற்று வழிபடுவர்.இந்த விழா, இந்தஆண்டு கடந்த மாதம்
30ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 7ம் தேதி இரவு பூவோடு வைத்த பின்பு, 1:00 மணிக்கு விழா கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு 18 வகையான சிறப்பு
அபிஷேகம் நடந்தது.வரும் 14ம் தேதி இரவு, 7:00 மணிக்கு தீர்த்தம் செலுத்துதல், 10:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்தல், 15ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு பின், மாவிளக்கு, பூவோடு எடுத்தல், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. வரும் 16ம் தேதி மதியம் 3:00 மணிக்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி திருத்தேரோட்டம்
நடக்கிறது.தேரோட்டம் நிறைவுக்கு பின், மஞ்சள் நீராடுதல், வரும் 17ம் தேதி பகல், 1:00 மணிக்கு மகாஅபிஷேகம், சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.