கம்மாபுரம்: சித்திரை மாத சஷ்டியையொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.
கம்மாபுரம் அடுத்த புதுவிருத்தகிரிக்குப்பம் சுப்ரமணியர் கோவிலில், நேற்று முன்தினம் (மே., 11ல்) காலை 9:00 மணியளவில், அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 4:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.அதேபோல், விளக்கப்பாடி, சி.கீரனூர் சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.