மானாமதுரை:மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள்39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரிகள் இன்று மே., 13 முதல் துவங்கி நாளை மே., 14 வரை நடைபெற உள்ளது.
இதில் கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.இன்று (மே., 13ல்) காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், உஞ்சவிருத்தி,தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.
மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது. நாளை (மே., 14ல்) காலை7:00 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தி, 9:00 மணிக்கு குரு அஞ்சலி, கோஷ்டி கானம், 10:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரிகளும் நடைபெற உள்ளன.இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.