Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை ஆதினம் மடத்தில் ஞானசம்பந்தர் ... காஞ்சிபுரம் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்துக்கு வரும் காவிரி நீர் அத்தி வரதர் வைபவத்திற்கு ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
03:05

காஞ்சிபுரம்: மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அத்தி வரதர் வைபவத்திற் காக வரும் பக்தர்களுக்கு, காவிரி நீரை, காஞ்சிபுரத்திற்கு கொண்டுவரும் பணி நடப்பதாக, நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்த சரஸ் குளத்தில் வீற்றுள்ள அத்தி வரதரை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வெளியே எடுக்கும் வைபவம் நடக்கிறது.ஜூலை, 1ல் இருந்து, 48 நாட்கள், பக்தர்களுக்கு, அத்தி வரதர் அருள்பாலிக்கவுள்ளார். 24 நாட்கள் சயன நிலையி லும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் அளிக்கவுள்ள இவரை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதி மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.மக்கள் கூடும் இடங்கள், வாகன நிறுத்தங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணியை, நகராட்சி நிர்வாகம் கவனிக்கிறது.குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலை யில், வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு குடிநீர் வருகிறது. இந்நிலையில், அரக்கோணத்திற்கு வரும் காவிரி நீரை, திருப்பாற் கடல் வழியாக காஞ்சிபுரத்திற்கு கொண்டுவர, ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தர்மபுரி கூட்டு குடிநீர் திட்டத்தில், அரக்கோணம் வரை காவிரி நீர் வருகிறது. அதிலிருந்து, திருப்பாற்கடல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்துடன் இணைத்து, அத்தி வரதர் வைபவத்திற்காக, காஞ்சிபுரத்திற்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு, 20 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு அனுமதி கேட்கப் பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம், அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்த பின், பணிகள் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar